×

மன்னார்குடி அரசு மருத்துவமனையில் போதை ஆசாமி ரகளை; நாற்காலி உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கினார்..!!

திருவாரூர்: மன்னார்குடி அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் வந்த ஒருவர் அங்குள்ள பொருட்களை அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவட்டத்தின் தலைமை அரசு மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது மன்னார்குடி அரசு மருத்துவமனை. இந்த மருத்துவமனையில் உள்ளிக்கோட்டை, பரவாங்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று இரவு கஞ்சா போதையில் மன்னார்குடி பகுதியை சேர்ந்த வடிவேலு என்ற நபர், மன்னார்குடி அரசு மருத்துவமனையில் புகுந்து ரகளையில் ஈடுபட்டுள்ளார். அங்கு வைக்கப்பட்டிருந்த நாற்காலி உள்ளிட்ட பொருட்களை போதை ஆசாமி அடித்து நொறுக்கினார்.

மேலும் மருத்துவமனையில் இருந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மீது தாக்குதல் நடத்த முற்பட்டுள்ளார். மருத்துவமனை ஊழியர்களையும் தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அருகில் இருந்த நபர் செல்போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து மன்னார்குடி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். வடிவேலு ஏற்கனவே பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மருத்துவமனையில் புகுந்து ரகளையில் ஈடுபட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். போதை ஆசாமிக்கு போலீஸ் வலைவீசியுள்ளது.

The post மன்னார்குடி அரசு மருத்துவமனையில் போதை ஆசாமி ரகளை; நாற்காலி உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கினார்..!! appeared first on Dinakaran.

Tags : Mannargudi govt ,Tiruvarur ,Mannargudi Government Hospital ,Tiruvarur district ,Inlikottai ,Parawangottai ,Dinakaran ,
× RELATED ஒவ்வொரு துறையிலும் முதல்வனாக...